Friday, 30 December 2016

ஆறு தரிசனங்கள் - 02

ஆறு தரிசனங்கள்:[Shad Darshanas]
===============================
உண்மை பொருளை ஆறு கோணங்களில் அவதானித்து பெற்ற ஆறு தோற்றங்களே ஆறு தரிசனங்கள். ஒவ்வொரு தரிசனமும் ஒவ்வொரு சூத்திரத்தை அடிப்படையாக கொண்டது. அவை முற்காலத்தில் ஆதிகுருக்களின் சுய அனுபவத்தினாலும், தியானத்தினாலும் சூத்திரமாக இயற்றப்பட்டது. அதன் பின் பல உரையாசிரியர்கள் தோன்றி தரிசனத்த்தின் சூத்திரங்களை விரித்தும், விவரித்தும் உரைத்தனர். இதன் அடிப்படையில் ஒவ்வொரு தரிசனத்திற்க்கும் இன்றைய தேதியில் சூத்திரமாக நமக்கு உதவும்படி வழங்கியவர் யாவர் என பார்ப்போம்.
1. நியாயம் - கெளதமரிஷி
2.வைசேடிகம் - கணாதரிஷி
3.சாங்கியம் - கபிலமுனிவர்
4.யோகம் - பதஞ்சலிமுனிவர்
5.பூர்வமீமாம்சை - சைமினி
6.உத்தரமீமாம்சை - வியாசர்

No comments:

Post a Comment