Friday, 30 December 2016

ஆறு தரிசனங்கள் - 03

பிரமாணங்கள்
=============

தரிசனங்களை பற்றி விளங்கிகொள்ள மூப்பொருள்களான உலகம், ஆன்மா, இறைவன் ஆகியவற்றின் அடிப்படை கருத்துக்களை கொண்டே புரிந்துகொள்ள முடியும். அந்த அடிப்படை கருத்துக்கள் எப்படி அணுகுகிறது, அது கையாளும் பிரமாணங்கள் எவை என தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
பிரமாணம்:
அறிபடும் பொருளை அறிந்துகொள்ள அறிபவனுக்கு வேண்டிய அறிவை தரும் வழிகள் பிரமாணங்கள் ஆகும்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிரமாணம் மொத்தம் ஆறு ஆகும். அவை,
1. பிரத்தியட்சம் - கண்முன் சிற்கும் முதல்கட்ட காட்சி அது மேலும் இரு இயல்புகள் கொண்டது.
2. அநுமானம் - காட்சியாக இன்ன பொருள் என தெரியவில்லை என்றாலும் இதற்க்கு முன் பிரத்தியட்சத்தினால் உருவான அறிவை கொண்டு ஊகிப்பது. அநுமானத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். அதனுள் செல்லாமல் உதாரணமாக ஒன்றை காண்போம்.
(உ) - குளிர் காற்று அடித்தால் மழை பெய்வது பிரத்தியட்சமாக அறிந்துகொள்கிறோம். அதனை வைத்து அடுத்த முறை குளிர் காற்று அடித்தால் மழை வரும் என அநுமானிக்குறோம்.
3. ஆப்தவாக்கியம் - முன்னறிவு, மூதாதையர் ஞானத்தை நம்பி ஏற்பது. சுருதி என்றும் கூறுவர்.
4. உபமானம் - ஒருவர் கூறும் பொருளை ஏற்கனவே உள்ள பொருளின் உவமை கொண்டு ஒப்பிட்டு, அதன் வேற்றுமைகளையும் தெரிந்த அப்பொருளை பற்றி அறிவது.
5. அருத்தாபத்தி - மேற்கூறிய (4) பிரமாணங்களிலிருந்து கிடைக்காமல் கிடைக்கும் அறிவு அருத்தாபத்தி எனப்படும்.(உ) - பகலில் உண்ணாத ஒருவன் பருத்து இருக்கிறான் எனில் அவன் இரவில் உண்கிறான் என (இரவு உண்பதை நேரில் காணாமேலேயே, யாரும் உரைக்காமல்) பொருள் கொள்வோம். ஆதலால் (1,3) பிரமாண ஆகாததால் (4) ம் பிரமாணம் ஆகாது. அதெப்படி (2) பிரமாணம் ஆகாது எனில் அநுமானம் என்பது வெறும் ஊகம் மட்டுமில்லாமல் வியாப்தி என்ற அம்சம் கொண்டது. அதாவது புகை உருவாகும் இடத்தில் சர்வநிச்சயமாக நெருப்பு உண்டு என்பதுதான். ஆனால் மேற்கூறிய உதாரணத்தின் படி பார்த்தால் இரவு உண்பவர் அனைவரும் பருப்பதில்லை, பகல் உண்பவர்களும் பருப்பதுண்டு. இப்படிப்பட்ட ஒரு அறிவே இங்கு பிரமாணம் ஆகிறது.
6. அனுபலப்தி - ஒரு பொருள் இல்லை என்பதை எவ்வாறு அறிகிறோம் என்பதே. இருப்பதை அறியவே மேற்கூறிய 5 பிரமாணங்களும் உதவுகிறது. இல்லாததை இல்லை என புலன்கள் உதவியில்லாமல் சொல்வது எவ்வாறு. அதனால் இன்மை என்ற அறிவு நமக்குள் உருவாவதினால். இதனையும் ஒரு பிரமாணமாக கொள்வதுண்டு.
மேற்கூறிய 6 பிரமாணங்களை வைத்தே ஆறு தரிசனங்களை சேர்ந்தோர் முப்பொருள்களுக்கான அடிப்படையை உருவாக்கினர். இப்பிரமாணங்கள் வைத்து ஆறு தரிசனங்களையும் மேலும் பிரிக்கலாம்.

No comments:

Post a Comment