3. வைசேஷிகம்
==============
==============
அணு தத்துவம் பேசும் வைசேஷிகம் தரிசனத்தை முறைபடுத்தி இயற்றியவர் கணாத முனிவர் ஆவர். இன்று, அணு தத்துவத்தை முதலில் பேசுபவர்களாக கருதப்படும் 2ம் நூற்றாண்டு கிரேக்க ஞானிகளை விட காலத்தால் முந்தியவர் கணாத முனிவர். அணுக்களின் இரட்டைத்தன்மை, கோள வடிவம், காலம்-இடம் தொடர்பை பேசும் ரிலேட்டிவிட்டி தியரி போன்ற கருத்துக்களையும் வைசேஷிகம் எடுத்துரைப்பது விசேஷம்.
வைசேஷிகம் கூறும் மூலக்காரணம்
==================================
==================================
மெய்மைவாதம் ஏற்கும் வைசேஷிகம் பல்வேறு இயல்புகளை உடைய இப்பிரபஞ்சம், உலகம் தோற்றத்திற்க்கு மூலப்பொருள் ஒன்று அல்ல பல என கூறுவது இயல்பானது. இந்த மூலப்பொருள் என்ன என்ற கேள்விக்கு விடையாக வைசேஷிக தரிசனம் கூறுவது "அணு" மற்றும் "பரமாணு" ஆகும். அணு அழியாதவை. அணுக்களே பொருள், உலகம் முதலிய அனைத்தையும் ஆக்கியும் அழிப்பனவையும் ஆகும். இவை பற்றி அறிந்துகொள்ள வைசேஷிகள் ஏற்கும் பிரமாணங்கள் இரண்டு அவை பிரத்தியட்சம் மற்றும் அநுமானம் ஆகும்.
வைசேஷிக தரிசனத்தின் தத்துவ மையம்
=======================================
=======================================
ஒவ்வொரு பொருளுக்கும் பிரிபடாத நிலை என்ற ஒன்று உண்டு அதுவே அணுவாகும். இவ்வணுக்கள் பலவாகும். இவ்வணுக்களின் கூட்டுத்தொகையே அனைத்து பொருட்களுக்கும் ஆதாரமாகும். இத்தொகைக்கு ஏற்ப பொருட்களின் அளவும் வேறுபடும் என கூறுகிறது. இங்ஙகனம் அணுக்கள் பலவும் ஒன்று சேர்வதும், பிரிவதும், உற்பத்தி ஆவதும், அழிவதும் என அது இயங்குவது எவ்வாறு எனும் கேள்விக்கு வைசேஷிகள் கூறிய விடை "அதிர்ஷ்டம்" எனப்படும் அணுக்களின் தனிப்பட்ட விசேஷமான இயக்கம் என்பதாகும். பிற்காலத்தில் அறிவற்ற அதிர்ஷ்டம் எவ்வாறு அறிவார்ந்த இயக்கத்திற்க்கு காரணம் என்ற கேள்விகள் எழும்பியபோது அந்த விசேஷ இயக்கத்தின் காரணம் "ஈஸ்வரன்" என்ற பதிலை முன்வைத்தது.
வைசேஷிக தரிசனத்தின் ஒன்பது திரவியங்கள்
============================================
மூலப்பொருள் அணு என்றும் அவை பல என்றும் கூறும் வைசேஷிக தரிசனம். இவ்வுலகம் தோற்றத்திற்க்கு தேவைப்படும் கருப்பொருள்களை "திரவியம்" எனவும் அவை ஐம்பூதங்கள், காலம், இடம், மனம், ஆத்மா என்பதாகும்.
============================================
மூலப்பொருள் அணு என்றும் அவை பல என்றும் கூறும் வைசேஷிக தரிசனம். இவ்வுலகம் தோற்றத்திற்க்கு தேவைப்படும் கருப்பொருள்களை "திரவியம்" எனவும் அவை ஐம்பூதங்கள், காலம், இடம், மனம், ஆத்மா என்பதாகும்.
வைசேஷிக தரிசனத்தின் குறிக்கோள்
===================================
ஆத்மா தன் மனதின் செயல்பாட்டால் உடலோடு தொடர்பு கொண்டுள்ளது. தன் அறியாமையினால் செய்யப்படும் செயல்களின் பலனாக நல்வினை மற்றும் தீவினை என இரண்டையும் அனுபவிக்கிறது. இதிலிருந்து விடுபட தன் செயல்களை நிறுத்துவதினாலும், ஏற்கனவே செய்த செயல்களின் பலனாக விளைந்த நல்வினை, தீவினை முடிப்பதினாலும், ஆன்மாவுக்கு "விடுதலை" கிடைக்கும் என்பதே வைசேஷிகள் கூறும் முடிவாகும்.
===================================
ஆத்மா தன் மனதின் செயல்பாட்டால் உடலோடு தொடர்பு கொண்டுள்ளது. தன் அறியாமையினால் செய்யப்படும் செயல்களின் பலனாக நல்வினை மற்றும் தீவினை என இரண்டையும் அனுபவிக்கிறது. இதிலிருந்து விடுபட தன் செயல்களை நிறுத்துவதினாலும், ஏற்கனவே செய்த செயல்களின் பலனாக விளைந்த நல்வினை, தீவினை முடிப்பதினாலும், ஆன்மாவுக்கு "விடுதலை" கிடைக்கும் என்பதே வைசேஷிகள் கூறும் முடிவாகும்.
No comments:
Post a Comment