4.நியாயம்
==========
==========
எந்த ஒரு உண்மையையும் விளக்க அதை முதலில் தர்க்க ரீதியாக சரியாக தர்கிக்க வேண்டும். அலசி ஆராயந்து அணுகவேண்டும். இதற்கான கோட்பாட்டை முன்னெடுத்தவர் கெளதம மகரிஷி ஆவார்.
நியாயம் கூறும் அம்சங்கள்
========================
========================
தர்க்க ரீதியாக அணுக வேண்டிய அறிவு நிகழ்வதற்க்கு கீழ்காணும் அம்சங்கள் இன்றியமையாதவை. அவை,
1. அறிய வேண்டிய "அறிபவன்" - பிரமாதா
2. அறிபவன் அறிய வேண்டிய பொருள் - "அறிபொருள்" - பிரமேயம்
3. அறிபடும் பொருளை அறிந்துகொள்ள அறிபவனுக்கு வேண்டிய அறிவை தரும் வழிகள் - பிரமாணம்
4. ஆராயும் அறிவு - பிரமிதி
இதில் நியாய தரிசனம் பிரமாணத்தை முன்னிலை படுத்துகிறது. காரணம் அறிவை தரும் வழிகள் சரியானதாக இருந்தால்தான் அதனை ஆராயும் பிரமிதி சரியான முடிவை தரும் என்பதே, இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிரமாணம் மொத்தம் ஆறு ஆகும். அதில் நான்கு பிரமாணங்களை மிக முக்கியமாக நியாய தரிசனம் ஏற்றுக்கொள்கிறது. [ பிரமாணங்கள் பற்றிய பார்வை கூறித்த லிங்க் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.]
நியாய தரிசனத்தின் தத்துவமையம்
================================
================================
வைசேஷிக தரிசனத்தின் அணுக்கொள்கையை ஏற்பதுடன் இறைவன் இருப்பை தர்க்க ரீதியாகவும் வலியுறுத்துகிறது நியாய தரிசனம். எப்படி உலக தோற்றத்திற்க்கு அணு காரணமாக இருக்கிறதோ அதே போல் அந்த அணுக்களின் இயக்க காரணமாக 'ஈஸ்வரன்' இருப்பதை தெளிவுபடுத்துகிறது நியாய தரிசனம். அணுக்கள் போலவே 'ஈஸ்வரன்' நிரந்தரமானது. வைசேஷிகம் கூறும் திரவியங்களை தோற்றுவிக்கவில்லை ஆனால் இயக்ககூடிய பேரறிவாக 'ஈஸ்வரன்' இருப்பதை ஒன்பது சான்றுகளாக கூறி தர்க்கரீதியாக வாதிடுகிறது.
ஈஸ்வர இருப்புக்கான 9 சான்றுகள்
=================================
=================================
நியாயம் கூறும் ஈஸ்வர இருப்புக்கான சான்றுகள் 9 ஆகும் அவை கார்யாத் (விளைவு), அயோஜனாத் (அணு சேர்க்கை), த்ரிதே (பிரபஞ்சம் இருப்பை தாங்குவது), பதாத் (வாக்கு), பிரத்யதஹ் (நம்பிக்கை), ஸ்ருதே (வேதம்), வாக்யாத் (வேத கூற்று), சங்க்யாவிசேஷாத் (விசேஷ எண்கள்), அதிருஷ்டாத் (கர்ம பலன்) என்பனவாகும். இக்காரணங்களை வைத்தே ஈஸ்வர இருப்பை நிலைநிறுத்துகிறது நியாய தரிசனம்.
நியாய தரிசனத்தின் குறிக்கோள்
==============================
==============================
தர்க்க ரீதியாக அணுகும் நியாயம் தரிசனம் அறிவே ஆன்மா என்கிறது. அந்த அறிவை மழுங்க செய்யும் உலகப்பொருட்களிலிருந்து விடுபட்டு எல்லாவற்றையும் அறிந்த பேரறிவாக கூறப்படும் ஈஸ்வர நிலையை சார்வதே நியாயம் கூறும் முக்தியாகும்.
No comments:
Post a Comment