Monday, 9 July 2018

ஆறு தரிசனங்கள் - 10

6. உத்தர மீமாம்சை (எ) வேதாந்தம்
=================================
பூர்வ மீமாம்சை மற்றும் உத்தர மீமாம்சை இவை இரண்டும் வேதத்தின் இரு பெரும் பிரிவுகளை வைத்துதான். அதில் முந்தைய பிரிவான பிரமாணங்களை ஆதாரமாக கொண்டு எழுந்தது பூர்வ மீமாம்சை. பிந்தைய பிரிவான உபநிடதங்களை ஆதாரமாக கொண்டு எழுந்தது உத்தர மீமாம்சை. வேத உபநிடத கருத்துக்கள் அனைத்தும் கொண்டு வர எண்ணி சுருக்கமாகவும் எழுதப்பட்டதே "பிரம்ம சூத்திரம்" ஆகும்.
ஞான மார்க்கம்
===============
பாதராயணர் வேதாந்த சுத்திரத்தில் மூலப்பொருள் ஒன்றே என நிலைநாட்டுகிறார். வீடுபேற்றை பெற முக்கிய்மானது கன்மமா? ஞானமா? என்பதில் பூர்வ மீமாம்சை கன்மம் முக்கியம் என்கிறது. இதற்க்கு மாறாக உத்தர மீமாம்சை ஞானமே முக்கியம் என்கிறது.
வேதாந்தத்தின் தத்துவ மையம்
==============================
பிரம்மத்திற்க்கு இருநிலை இருப்பதாக கூறுகிறது. அதாவது, குணத்தை கடந்த நிலை "நிர்க்குண பிரம்மம்" என்றும், குணத்தோடு சேர்ந்து இருக்கும் நிலை "சகுண பிரம்மம்" என்றும் வழங்கப்படுகிறது. இந்த இருநிலைகளின் வேறுபாட்க்கு காரணம் "மாயை". மாயையினால் பிரம்மத்திற்க்கு எந்த பாதிப்பும் இல்லை. பிரம்மத்தை சீவர்களாக தோன்ற காரணம் "அவித்தை". வித்தை என்றால் அறிவு, அவித்தை என்றால் அறியாமை. அவித்தையால் பாதிக்கப்பட்ட நிலையே சீவர் கள் எனவும், சீவாத்மா எனவும் வழங்கப்படுகிறது.
வேதாந்ததின் தத்துவ பிரிவுகள்
==============================
விரிந்து கிடந்த வேத, உபநிடத கருத்துக்களை சுருக்கி விளக்கப்பட்டதே "பிரம்ம சூத்திரம்" என பார்த்தோம். பிரம்ம சூத்திரம் சுருக்கி எழுதப்பட்ட காரணத்தினால் அதை புரிந்துகொள்ள பெரும் விளக்கங்கள் கொடுக்க வேண்டியதாயிற்று. அப்படி எழுதியதின் விளைவுதான் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் போன்ற தத்துவ விளக்கங்கள் உருவான காரணமாகும். இவ்வுருவாகிய விளக்கங்கள் இன்று பல பிரிவாக இருக்கின்றன. உதாரணமாக - வடகலை, தென்கலை.
உத்தர மீமாம்சை குறிக்கோள்
============================
அவித்தையால பாதிக்கப்பட்டதும், மூன்று குணங்களை கொண்டதுமான சீவர்கள் என்கிற சீவாத்மாக்கள் இதிலிருந்து விடுபட்டு தெளியும் நிலையே மோட்சமாகும். ஏகேமாயான அந்நிலையை அடைய ஞானமே முக்கிய வழியாகவும் கூறுகிறது. ஞானத்தை அடைய அஞ்ஞானத்தினால் அல்லல்படும் சீவாத்மாக்கள் அதை விடுபட்டு ஞானத்தை அடைய தர்மம், நல்லொழுக்கம், இறைவழிபாடு துணையாக உறுதுனை செய்யும் என விளக்கம் கொடுக்கிறது உத்தர மீமாம்சை எனப்படும் வேதாந்த தரிசனம்


இத்துடன் ஆறு தரிசனங்கள் பற்றிய சுருக்கமான விளக்கம் நிறைவு பெறுகிறது.

No comments:

Post a Comment