5. பூர்வ மீமாம்சம்
=================
=================
மீமாம்சை தரிசனங்கள் இரண்டு ஆகும். அவை பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை ஆகும். அதில், வேத பிரமாணத்தை அப்படியே ஏற்றுக்கொள்வதே பூர்வ மீமாம்சை. வேதம் ஆராய்வுக்கு அப்பாற்ப்பட்டது என்றும் அதற்க்கு கொடுக்கம் விளக்கம் ஆராய்வதற்க்குரியது என விளக்கங்களை அலசுவதே சரியான வழியாகும் என எடுத்துரைப்பதே "பூர்வ மீமாசை" நூலான "மீமாம்ச சுத்திரம்" இதனை இயற்றியவர் ஜைமினி முனிவர் ஆவர்.
கர்ம மார்க்கம்
=============
=============
வேதம் தெய்வீகமானது என முன்னிறுத்தும் பூர்வமீமாசை தரிசனம். வேதம் மூலமாக அறியும் ஞானத்தை விட, அதில் சொல்லப்பட்டுள்ள தர்மத்தையே முக்கியமானதாக கருதுகின்றது. உயிர்கள் நல்ல பலன்களை அடையவேண்டி கிரியை கள், சுவர்க்கம் பூக வேண்டி செய்ய வேண்டிய கிரியைகள், யாகங்கள் அதன் பலன்கள் என கர்மத்தை முன்னிறுத்துவதால் இத்தரிசனத்தை "கர்ம காண்டம்" என்றும் கூறுவர்.
பூர்வ மீமாம்ச தரிசனத்தின் தத்துவ மையம்
=========================================
=========================================
உலகம் உருவான விதம் பொறுத்தமட்டில் பூர்வ மீமாம்சம் தரிசனம் வைஷிக தரிசனத்தின் கோட்பாட்டை கொண்டதாகும். அதிலும் வேத வாக்கின்படி கண்ணுக்கு புலனாகும் மூவினை கோட்பாடு வரையே ஒப்புக்கொள்ளும். முந்தைய தரிசனங்கள் போல ஆன்மா நித்தியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறது. பூர்வ மீமாம்ச தரிசனம் வேதம் நித்தியமானது என சொன்னாலும், இறைவன் கொள்கையில் உண்டா? இல்லையா? என்பதை பற்றி ஏதும் விவரிக்கவில்லை. ஆனால், கன்மத்துக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதனை துன்பத்திற்க்கு காரணம் ஆன்மாக்களின் செய்த கன்மங்களே என கூறுவதில் தெரிந்துக்கொள்ளலாம்.
பூர்வ மீமாம்சை குறிக்கோள்
===========================
===========================
வேதம் "அபெளருஷ்யத்துவம்" அதாவது யாராலும் இயற்றப்படமுடியாதது என கூறுகிறது. அதனால் வேதத்தில் சொல்லப்படும் தர்மத்தையும், சடங்குகளையும் பின்பற்றுவதே ஆன்மாவின் கடமையாக கூறுகிறது. அக்கடமையை தவறாமல் செய்வதால் நரகத்தை அடையாமல் சொர்க்கத்தை அடைவதே குறிக்கோள் என வலியுறுத்துகிறது. உலக பந்ததிற்க்கு கன்மமே காரணம் எனில் கன்மம் செய்து முக்தி அடைவது எப்படி என்ற கேள்விக்கு பூர்வ மீமாம்சை 3 வித கன்மங்களை கூறுகிறது அவை, காமிய கன்மம், பிரதிசித்த கன்மம் மற்றும் நித்திய கன்மம் ஆகும். இதில் முக்தி அடைய முதல் இரண்டு கன்மங்களாஅன காமிய மற்று பிரதிசித்த கன்மத்தை விடவேண்டும், அதோடு நித்திய கன்மத்தை விடாமல் செய்தால் முக்தி கைக்கூடும் என்று பதில் அளிக்கிறது.
No comments:
Post a Comment